×

மேல்படிப்புக்காக சென்ற இடத்தில் உடைமைகள் திருட்டு அமெரிக்கா வீதிகளில் தவிக்கும் ஐதராபாத் பெண்

சிகாகோ: அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க ஐதராபாத்தில் இருந்து சென்ற இளம்பெண் சிகாகோ நகர தெருக்களில் அவர் சுற்றி திரிகிறார். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். கடந்த 2 மாதங்களாக அவரது தாயார் சையிடா வகாஜ் பாத்திமாவால் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அப்போது ஐதராபாத் நகரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர், பாத்திமாவை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகள் மனஅழுத்தத்தில் உள்ளார். அவரது உடைமைகளை யாரோ சிலர் திருடி சென்று விட்டனர். இதனால், உணவு வாங்க கூட பணம் இன்றி பசியால் வாடி வருகிறார். சிகாகோ நகர தெருக்களில் அவர் சுற்றி திரிகிறார் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தனது மகளை மீட்டு தரும்படி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், தனது மகளை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post மேல்படிப்புக்காக சென்ற இடத்தில் உடைமைகள் திருட்டு அமெரிக்கா வீதிகளில் தவிக்கும் ஐதராபாத் பெண் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,America ,CHICAGO ,US ,Telangana ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...