×

யானைகவுனி அருகே 37 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: யானைகவுனி பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 37 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ராத்தோர், அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, C-2 யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (25.07.2023) மாலை, சௌகார்பேட்டை, ஆரியப்பா நாயக்கன் தெருவில் கண்காணித்து, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த மஹாவீர் சந்த் ஜெயின், வ/43, த/பெ.மதன்லால்ஜெயின், சௌகார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 37 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, எதிரி மஹாவீர் சந்த் ஜெயின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post யானைகவுனி அருகே 37 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Yanagauni ,CHENNAI ,Gutka ,Yanigauni ,Yanikauni ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது