×

கேரளாவில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பினராயி விஜயன் பேசும் போது மைக்கில் திடீர் கோளாறு: போலீஸ் வழக்கு பதிவு

திருவனந்தபுரம்: சமீபத்தில் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இரங்கல் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார். அவர் பேசும்போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டது. சில நிமிடங்கள் பினராயி விஜயனால் பேச முடியாத நிலை ஏற்பட்டது. மைக்கை சரி செய்த பிறகு அவர் பேச தொடங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் போலீசார், தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக யாரும் புகார் செய்யாத போதிலும் கேரள போலீஸ் சட்டம் 118 இ என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது அல்லது பொது பாதுகாப்புக்கு தெரிந்தோ தெரியாமலோ இடையூறு ஏற்படுத்துவது இந்த பிரிவில் வரும். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மைக் மற்றும் ஆம்ப்ளிபயரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் செய்துள்ளனர். போலீசார் எதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று புரியவில்லை என்றும், மைக்கையும், ஆம்ப்ளிபயரையும் கைப்பற்றியது வேடிக்கையாக இருக்கிறது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

The post கேரளாவில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பினராயி விஜயன் பேசும் போது மைக்கில் திடீர் கோளாறு: போலீஸ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Binarayi Vijayan ,Kerala ,Mike ,Thiruvananthapuram ,Umman Santi ,Mic ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...