பெங்களூரு : கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.இந்த நிலையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது, “கர்நாடகாவில் கடற்கரையோர பகுதி வடக்கு உள் மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் அரசு ஆய்வு செய்து உன்னிப்பாக கவனித்து வருகிறது.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பிட்ட இடங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
The post குறிப்பிட்ட இடங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை : கர்நாடக முதல்வர் சித்தராமையா appeared first on Dinakaran.