×

பழநியில் மடத்து நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

பழநி, ஜூலை 26:பழநி டவுன், அப்பர் தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (69). அடிவாரத்தில் உள்ள ஒரு சமுதாய மடத்தின் தலைவராக உள்ளார். அந்த மடத்தை அதே பகுதியை சேர்ந்த நடராஜ் (84) என்பவர் ஆக்கிரமிப்பு செய்ததாக மடத்தின் நிர்வாகிகள் புகார் கூறி வந்தனர். இதுதொடர்பாக போராட்டமும் நடத்தினர். இந்நிலையில் சிவசுப்பிரமணியன், ஆர்.எப்.ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நடராஜ், அவரது கார் டிரைவரான அடிவாரத்தை சேர்ந்த மருதமுத்து (60) ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசுப்பிரமணியன் தரப்பினர் அளித்த புகாரில் பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து நடராஜ், மருதமுத்துவை கைது செய்தனர்.

The post பழநியில் மடத்து நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palani ,Sivasubramanian ,Upper Street, Palani Town ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை