×

டூவீலரில் வந்து வழிப்பறி

 

மதுரை, ஜூலை 26: மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் கௌதம் கார்த்திக்(18). இவர் கோரிப்பாளையம் – யானைக்கல் மேம்பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு ஒரு டூவீலரில் வந்த 3 மர்ம நபர்கள், கௌதம் கார்த்திக்கை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் தகராறு செய்து, மிரட்டி, அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்தனர். இதைப்பார்த்த, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தை பறித்துக்கொண்டு, மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரில் ெசல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலரில் வந்து வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Gautham Karthik ,Aruldaspuram, Sellur, Madurai ,Koripalayam ,Yanaikal ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...