×

சாலை சீரமைப்பு பணிகள் நிறைவு: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு காணொலி மூலம் அமைச்சர் திறப்பு

 

பாலக்காடு, ஜூலை 26: கேரள மாநிலம், மலம்புழா சட்டமன்றத்திற்கு உட்பட்ட சீரமைக்கப்பட்ட பாலக்காடு -பொள்ளாச்சி மாநில சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் நேற்று கணொலி மூலம் திறந்து வைத்தார். பாலக்காடு அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ பிரபாகரன் தலைமை வகித்தார்.

கோழிக்கோடு வடக்கு மண்டலம் பொறியாளர் ஜெயஸ்ரீ அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள், மலம்புழா பிளாக் பஞ்சாயத்து தலைவர் பிஜோய், மருதரோடு, கொடும், எலப்புள்ளி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உன்னிகிருஷ்ணன், தனராஜ், ரேவதி பாபு, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பத்மினி, பிளாக் பஞ்சாயத்து செயற்குழு தலைவர் மகேஷ், எலப்புள்ளி கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் சுனில்குமார், கொடும்பு கிராம பஞ்சாயத்து துணை தலைவர் சாந்தா, மருதரோடு கிராம பஞ்சாயத்து செயற்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், கொடும்பு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பிரவீணா, உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post சாலை சீரமைப்பு பணிகள் நிறைவு: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு காணொலி மூலம் அமைச்சர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Palakkad-Pollachi ,Malampuzha Legislature ,Kerala ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...