×

வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

 

ராமநாதபுரம், ஜூலை 26: இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மாற்றுதிறனாளிகள் கொடுத்த மனுவில், மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் வழிகாட்டி மற்றும் உதவிட சைகை மொழி பெயர்ப்பாளரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். கூடுதல் கிலோவில் ரேசன் அரிசி பெற்றிட அனைவருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் நிலையில் உள்ள அடையாள ரேசன் அட்டை வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

The post வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,PWD ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...