திருப்புவனம், ஜூலை 26: திருப்புவனத்தில் ஏடிஎம் மையத்தினுள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எதிரே வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று மாலை சிலர் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றுள்ளனர். அப்போது ஏடிஎம் மைய கண்ணாடி கதவிற்கு மேல் பாம்பு சீறும் சப்தம் கேட்டு பார்த்தனர். இதனால் வரிசையில் நின்றவர்கள் சிதறியடித்து ஓடினர். மையத்தினுள் இருவர் பணம் எடுத்து விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடித்து சென்று காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.
The post ஏடிஎம் மையத்தில் புகுந்த பாம்பு appeared first on Dinakaran.