×

ஆத்தூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்: ஏராளமானோர் பங்கேற்பு

புழல்:ஆத்தூர் ஊராட்சியில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி அலுவலகத்தில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் இலவச மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அணு ரத்னா தலைமை வகித்தார். ஆத்தூர், பெரியார்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு கண், காது, மூக்கு தொண்டை மற்றும் மகளிர் சார்ந்த மருத்துவம் குறித்து சிகிச்சைகள் அளித்து இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இந்த மருத்துவ முகாமில், ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஆத்தூர் சற்குணம், ஒன்றிய கவுன்சிலர் தீபா நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் நீலமேகம், ஆத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்யாமோகன், காந்தி, மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆத்தூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Medical ,Camp ,Attur Panchayat ,Chennai Cholavaram Union Atoor Panchayat Office ,Chennai ,Medical Camp ,Atoor Panchayat ,
× RELATED உத்தரவாதம் தந்து மருத்துவ...