×

எல்லையில் போதைப்பொருள் கடத்திய பாக். ஆசாமி சுட்டுக்கொலை

சம்பா: ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் எல்லைப்பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்மநபர் ஊடுருவ முயன்றதை வீரர்கள் கண்டறிந்தனர். அவருக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மர்மநபர் உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் வீரர்கள் தேடியபோது தலா ஒரு கிலோ எடையுள்ள 4 பாக்கெட் போதைப்பொருட்கள் கிடந்தது கண்டறியப்பட்டது. இதனை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

The post எல்லையில் போதைப்பொருள் கடத்திய பாக். ஆசாமி சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Pak ,Samba ,Jammu and Kashmir ,Asami ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...