×

டெல்லி குடிநீர் வாரிய முறைகேடு சென்னையில் அமலாக்கத்துறை ரெய்டு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள குடிநீர் வாரியத்தில்(ஜல் போர்டு) டெண்டர் விடுவதில் ரூ.20கோடி ஊழல் நடந்துள்ளதாக கடந்த ஆண்டு சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வந்தது. இதன் அடிப்படையில் டெல்லி குடிநீர் வாரிய அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இது தவிர கேரளா, சென்னை உட்பட மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, முன்னாள் தலைமை இன்ஜினியர் ஜெகதீஷ் குமார் அரோராவுக்கு சொந்தமான, கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியது.

The post டெல்லி குடிநீர் வாரிய முறைகேடு சென்னையில் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Delhi Water Board Malpractice Enforcement Department ,Chennai ,New Delhi ,CBI ,Delhi Water Board ,Jal Board ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...