×

பெண் தூக்கிட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே ஏலசீட்டு நடத்தி நஷ்டமடைந்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கல்பாக்கம் அடுத்த கரியச்சேரி கல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தேன்மொழி (27). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தேன்மொழி அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், சீட்டு எடுத்தவர்கள் சிலர் சீட்டு பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதனால், கடன் தொல்லை தாளாமல் தேன்மொழி மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேன்மொழி தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார், தேன் மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Kalpakkam ,Kariyacherry Kalkulam ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...