×

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழப்பு!

பெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லை மாவட்டமான பெலகாவியில் குடியிருப்புக்களுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லையோர மாவட்டமான பெலகாவியில் அதிகனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த வாரத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து கர்நாடகாவிற்கு வரும் கிருஷ்ணா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் எல்லை மாவட்டமான பெலகாவியில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த கிராமங்களில் அதிகளவில் சிறு குறு தொழிலாளிகளின் முகாமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் தொழிலாளிகளின் கைத்தறி நெசவு இயந்திரங்கள் நீரில் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பதிப்பிற்குள்ளாகியுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 குழந்தைகளும் கனமழையின்போது வீடுகள் இடிந்து விழுந்ததால் உயிரிழந்துள்ளனர்.

The post கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 7 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Belagavi ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...