×

மணிப்பூர் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 7வது குற்றவாளி கைது!

மணிப்பூர்: மணிப்பூர் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 7வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தை சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 3 நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். இந்த விவகாரத்தில் இதுவரை 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேரில் ஒருவர் பதினெட்டு வயதிற்கு குறைவான சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.

The post மணிப்பூர் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 7வது குற்றவாளி கைது! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...