சிவகாசி: சிவகாசி அருகே தாயில்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சிவகாசி அருகே தாயில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மண்டகுண்டாப்பட்டி கிராமத்தில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில் ரோல் கேப் தயாரித்து வருகின்றனர். இன்று வழக்கம் போல பட்டாசு ஆலை செயல்பட்டு அதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது கேப் வெடி மூல பொருளில் உறைவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது பணியில் இருந்த மண்டகுண்டாப்பட்டி கிராமத்தை சேர்ந்த பானு, முருகலட்சுமி ஆகிய இருவருக்கும் தீ காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் வந்து தீயனை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு சேதம் ஏதும் ஏற்படாமல் தப்பினர். 2 பெண் தொழிலாளர்கள் மட்டுமே உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post சிவகாசி அருகே தாயில்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.