×

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3500 கன அடியாக அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பருவ மழையால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில், இந்த ஆண்டில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யும் என விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால், எதிர்பார்த்த மழையில்லாமல் போனது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் அவ்வப்போது கன மழை பெய்துள்ளது. பின் கடந்த சில வாரமாக மழையின்றி வெயிலின் தாக்கத்தால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்ய துவங்கியது. இரண்டு நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் பெய்ய துவங்கிய மழை நேற்று வரை பல மணி நேரம் நீடித்துள்ளது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், பரம்பிக்குளம் அணைக்கு கடந்த சிலநாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால், பரம்பிக்குளம் அணைக்கு, நேற்று இரவு முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதில் பரம்பிக்குளம் அணைக்கு, கடந்த வாரம் அதிகபட்சமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் நேற்று காலை நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 3500கன அடியாக அதிகரித்துள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை நிலவரப்படி மழையளவு வருமாறு: பரம்பிக்குளம் 26மிமீ, ஆழியார் 18மிமீ, பொள்ளாச்சி 14மிமீ, வால்பாறை 89 மிமீ, சோலையார் 65மிமீ, காடம்பாறை 28 மிமீ, மேல்நீரார் 105 மிமீ, கீழ்நீரார் 75 மிமீ, தூணக்கடவு 19 மிமீ, பெருவாரிபள்ளம் 17 மிமீ, அப்பர் ஆழியார் 3 மிமீ, நவமலை 14 மிமீ, வேட்டைக்காரன்புதூர் 21 மிமீ, சர்க்கார்பதி 15 மிமீ, நல்லாறு 19 மிமீ என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3500 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Heavy Rainfall Barambhikulam Dam ,West Ghats ,Pollachi ,Western Continuity ,Pharbaikulam Dam ,Heavy Rainfall Dam ,Dinakaran ,
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்