×

மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி சாவு

 

ஈரோடு, ஜூலை 25: ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்துள்ள கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (42). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 12 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டின் முன் உள்ள போர்வெல் மோட்டார் கடந்த 4 நாள்களுக்கு முன்னர் பழுதடைந்துவிட்டது. சரவணகுமார் அதை நேற்று முன் தினம் சரி செய்ய முயற்சித்தார்.

அப்போது பழுதடைந்திருந்த ஒயர்களில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, சரவணகுமாரின் உடலில் மின்சாரம் தாக்கியது. இதில், தூக்கி வீசப்பட்ட சரவண குமாரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சரவண குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, சிவகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Saravanakumar ,Kandasamipalayam ,Sivagiri, Erode district ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்