×

தறிப்பட்டறைக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு மீட்பு

 

ஈரோடு, ஜூலை 25: ஈரோடு ராசாம்பாளையத்தில் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான தறிப்பட்டறை இயங்கி வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் தறிப்பட்டறையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, துணி மற்றும் பாவு வைத்திருக்கும் அறையில் இருந்து வித்தியாசமான சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

இதனால், தொழிலாளர்கள் அந்த அறையில் சென்று பார்த்தனர். அப்போது, பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பந்தப்பட்ட தறிப்பட்டறைக்கு விரைந்து வந்து, சுமார் 30 நிமிடம் போராடி, 10 அடி நீளமுள்ள விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பாம்பை ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து, அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post தறிப்பட்டறைக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Saravanakumar ,Rasampalayam, Erode ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்