×

கிட்டாம்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பம்

 

சோமனூர், ஜூலை 25: கிட்டாம்பாளையம் ஊராட்சியில் களைஞரின் மகளிர் உதவி தொகைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மொத்தமுள்ள 1360 குடும்ப அட்டைதாரர்களில் முதல் நாளான நேற்று 165 மகளிர்களுக்கு பதிவு செய்யப்பட்டது. ஊராட்சி தலைவர் விஎம்சி.சந்திரசேகர் பொதுமக்களின் வசதிக்காக முகாம் அமைக்கப்பட்டு குடிநீர் மற்றும் இருக்கை வசதியுடன் சாமியான வசதி ஏற்படுத்தினார்.

இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி மையங்களை ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகளை பார்வையிட்டார். கிட்டாம்பாளையம் மையத்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜன், வடுகபாளையம் மையத்தை கிராம உதவியாளர் சின்னரங்கன் மேற்பார்வையில் நடைபெற்றது. வடுகபாளையம் மையத்தில் 91 பேருக்கும் கிட்டாம்பாளையம் மையத்தில் 74 பேருக்கும் பதிவு செய்யப்பட்டது.

The post கிட்டாம்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Kitambalaiam ,Puraduchi Somanur ,Kitambalayam ,
× RELATED சோமனூர் அருகே கிட்டாம்பாளையம்...