சுரண்டை ஜூலை25: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நாடார் வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமுதா சந்திரன், தபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீருடை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கி நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவரும், தொழிலதிபருமான எஸ்.வி.கணேசன் பேசினார். நிகழ்ச்சியில் சுரண்டை நகர திமுக முன்னாள் செயலாளர் முத்துக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அருணா கண்ணன், சங்கர், கவுன்சிலர் உஷா பேபி பிரபு, கணேசன், கவுன்சிலர்கள் வசந்தன்,பொன்ராணி,நாடார் வாலிபர் சங்க நிர்வாகிகள் ராமர், முருகன், பாலன், கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்த தொழிலதிபர் எஸ்வி கணேசனுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
The post சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் appeared first on Dinakaran.