×

பைக் மீது பஸ் மோதி மாணவன் படுகாயம்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்த கார்த்திக் (19). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர்களது உறவினர் பெண் ரித்திகா (20) காரப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை கார்த்திக் ரித்திகாவை ஐடி நிறுவனத்தில் விடுவதற்காக தனது பைக்கில் அழைத்து சென்றார்.

துரைப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து துரைப்பாக்கம் 200 அடி சாலையைக் கடக்க கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அப்போது, பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் சிக்னல் நோக்கி வந்த தனியார் கல்லூரி பேருந்து கார்த்திக் பைக் மீது மோதியதால், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கார்த்திக் பேருந்தின் கீழே சிக்கினார். ரித்திகா பேருந்தின் வலது புறமாக கீழே விழுந்தார். இதில் கார்த்திக்குக்கு இடது காலில் பலத்த காயமும், ரித்திகாவிற்கு இடது காலில் லேசான காயமும் ஏற்பட்டது.

இருவரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக துரைப்பாக்கம் 200 அடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த துரைப்பாக்கம் 200அடி சாலை பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பைக் மீது பஸ் மோதி மாணவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Karthic ,Kamarajar Street ,College of Private Engineering ,Tampar ,on Bus Collision Student Board ,Dinakaran ,
× RELATED மகள் சாவில் சந்தேகம்: போலீசில் தந்தை புகார் கோட்டாட்சியர் விசாரணை