×

கைகளை கட்டி, வாயில் ஷூவை திணித்து சித்ரவதை: மத்தியப்பிரதேசத்தில் 3 பேர் கைது

ரேவா: மத்தியப்பிரதேசத்தில் வாலிபரை கைகளை கட்டி, வாயில் ஷூவை திணித்து சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் கடந்த வாரம், இளைஞர் ஒருவர் கும்பலால் சித்ரவதைக்கு ஆளாகும் வீடியோ வைரலானது. இதில் அந்த நபரின் கைகளை பின்னால் கட்டி, வாயில் ஷூவை திணித்து, முகத்தில் சிலர் குத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட நபர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் இது குறித்து ரேவா காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் இந்த வீடியோ கடந்த 2021ம் ஆண்டு, பிப்ராகி கிராமத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், சித்ரவதை செய்யப்படும் நபர் உயர் பிரிவினரை சேர்ந்தவர் என்றும், அவரை கொடுமை செய்பவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக பழங்குடியின சங்கத்தை சேர்ந்த ஜவஹர் சிங்(55) என்பவரும் அவரது இரண்டு கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கைகளை கட்டி, வாயில் ஷூவை திணித்து சித்ரவதை: மத்தியப்பிரதேசத்தில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chitravatha ,Madhya Pradesh ,Rewa ,Madhea Pradesh ,Chitravatham ,Chitravad ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!