- சென்னை அரசு தொழிற்பயிற்சி மையம்
- சென்னை
- சென்னை அரசு தொழிற்பயிற்சி மையம்
- தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகள் சிவில் என்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், கட்டிடப்பட வரைவாளர் மற்றும் இயந்திரப்பட வரைவாளர், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக், பிட்டர், வட ஓராண்டு தொழிற் பிரிவுகள் இன்டீரியர் டிசைன் அன்ட் டெக்கரேஷன், மெக்கானிக் ஆட்டோபாடிபெயின்ட்டிங் மற்றும் டிரோன் பைலட் ஆறுமாத தொழிற் பிரிவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
10-வது தேர்ச்சி மற்றும் +2, பிப்ளமா மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியில் படித்தவர்களும் வேலைவாய்ப்பினை உடனடியாக தொழிற் நிறுவனங்களிலும், மத்திய மாநில அரசு நிறுவனங்களிலும் பெறும் வகையில் அனைத்து கல்வி சான்றிகழ்களுடன் நேரில் வருகைதந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு அரசு TATA டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில் நுட்பத்துடன் (Industry 4.0 Technology center)உரிய ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற் பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேற்காணும் பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100% வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
மாதம் ரூ. 750 உதவித்தொகை, NIMI பாடப் புத்தகங்கள், வரைபடக்கருவி, 2 செட் சீருடைகள் தையல் கட்டணத்துடன், பஸ்பாஸ், மூடுகாலணி ஆகியவை தமிழ்நாடு அரசினால் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிகட்டணம் கிடையாது. பயிற்சிநிலைய வளாகத்தில் தங்கி பயில விடுதி வசதி உண்டு. நேரடிச் சேர்க்கைக்கு துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் ஐடிஐ, மின்ட் வட சென்னை முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை appeared first on Dinakaran.