×

கோடை முடிந்தும் நெல்லையில் இளநீர் விற்பனை ஜோர்

நெல்லை: கோடை முடிந்த நிலையிலும் நெல்லையில் செவ்விளநீர் மற்றும் இளநீர் விற்பனை ஜோராக நடக்கிறது. இந்த ஆண்டு கோடை காலம் கடந்த பிப்ரவரியில் தொடங்கி ஜூன் வரை நீடித்தது. நடப்பு ஜூலை மாதத்திலும் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. காற்று வீசினாலும் பகல் நேர வெப்ப பதிவு அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கோடை காலம் போல் தாகம் தணிக்கவும் வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கவும் இளநீர். மற்றும் குளிர்பானங்களை அதிகம் பருகுகின்றனர்.

இதன் காரணமாக கோடையில் தோன்றிய பல தற்காலிக ஜூஸ் கடைகள் இப்போதும் தொடர்கின்றன. நெல்லைக்கு குமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் மானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இளநீர் மற்றும் ெசவ்விளநீர் விற்பனைக்கு தினமும் மின் வேன் மற்றும் லாரிகளில் வந்து குவிகின்றன. இளநீர் ரூ.30 விலையிலும் ெசவ்விளநீர் ரூ.40 என்ற விலையிலும் விற்பனையாகிறது. பல இளநீர் விற்பனை கடைகளில் அதிகாலை தொடங்கி பிற்பகலுக்குள் இளநீர் விற்று தீர்ந்து விடுகின்றன. இளநீர் மட்டுமின்றி பிற குளிர்பானங்கள் விற்பனையும் ஜோராக நடக்கின்றன.

The post கோடை முடிந்தும் நெல்லையில் இளநீர் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Paddy ,Jor ,
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...