×

கடனை திருப்பி செலுத்த முடியாததால் போதை பொருள் வியாபாரிக்கு மனைவியை ‘சப்ளை’ செய்த கணவன்

ரூர்கேலா: ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் வசிக்கும் போதை பொருளுக்கு அடிமையான ஒருவர், தினமும் போதைப் பொருட்களை சப்ளை செய்யும் நடைபாதை வியாபாரியிடம் போதை பொருளை வாங்கி பயன்படுத்தி வந்தார். அவரும் கடனுக்கு போதைப் பொருட்களை கொடுத்து வந்தார். ஒருகட்டத்தில் அவரால் கடனை திருப்பித் தரமுடியவில்லை. அதனால் போதைப் பொருள் வியாபாரி, அந்த நபரிம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். அதனால், அந்த நபர் கடனுக்கு பதிலாக தனது 27 வயதுடைய மனைவியுடன் உடல் உறவை வைத்துக் ெகாள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த வியாபாரியும், அந்த நபரின் மனைவியுடன் கடந்த இரண்டு மாதங்களாக உடலுறவை வைத்துக் கொண்டார். இருந்தும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது கணவர் வீட்டில் இருந்து தப்பித்து தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையறிந்த கணவன், போதை வியாபாரியை அழைத்துக் கொண்டு தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு காரில் சென்றார். அவரது மனைவி, கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். நீண்ட நேர சமாதான முயற்சிக்கு பின்னர், அந்தப் பெண் அவர்களுடன் காரில் ஏறினார். அவர்கள் வந்த கார், நல்லா சாலையை கடந்து சென்றது.

சில நிமிடங்கள் காரை நிறுத்தியதால், அதனை வாய்ப்பாக பயன்படுத்தி அந்தப் பெண் திடீரென காரிலிருந்து தப்பித்தார். பின்னர் அப்பகுதியில் இருந்த காவல் நிலையத்தை அணுகிய அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். அதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர், போதைப் பொருள் வியாபாரி, கார் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடனை திருப்பி செலுத்த முடியாததால் போதை பொருள் வியாபாரிக்கு மனைவியை ‘சப்ளை’ செய்த கணவன் appeared first on Dinakaran.

Tags : Rourkela ,Odisha ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…