×

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் ராஜேஷ் என்பவரின் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பிடித்ததும் தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 10க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் இயங்கி வரும் இயந்திரத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு இயந்திரம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது.

இதையடுத்து விபத்து குறித்து சிவகாசி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

ஆலையில் தீப்பிடித்ததும் தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Chengamalanachiarpuram ,Sivakasi ,Virudhunagar ,Rajesh ,Sengamalanachyarpuram ,Dinakaran ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு