×

சச்சின் மீனா – சீமா ஹைதர் காதல் விவகாரம்; போலி ஆவணங்களை தயாரித்த 2 சகோதரர்கள் கைது: பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடி

லக்னோ: சச்சின் மீனா – சீமா ஹைதர் காதல் விவகாரத்தில் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த 2 சகோதரர்கள் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது 4 குழந்தைகளுடன் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் தனது காதலன் சச்சின் மீனாவை சந்திப்பதற்காக கடந்த மே மாதம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவினார். தற்போது இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவர்களது திருமணம் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பது கேள்வியாக உள்ளது. அதேநேரம் சீமா ஹைதர், தனது பெயரை மாற்றிக் கொண்டு இந்தியாவிலேயே தனது கணவனுடன் வாழ்வதாக கூறி குடியரசு தலைவரிடம் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இதற்கிடையே சீமா ஹைதர் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ காரணமாக இருந்தவர்கள் குறித்த விபரங்களை உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் சேகரித்தனர். அந்த வகையில் சச்சின் மீனா மற்றும் சீமா ஹைதர் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த இரு சகோதர்களை பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சச்சின் மீனாவின் உறவினர்களான சகோதரர்கள் புஷ்பேந்திர மீனா மற்றும் அவரது சகோதரர் பவன் ஆகிய இருவரும், சீமா ஹைதருக்கு போலி ஆதார் அட்டையை தயாரித்து கொடுத்துள்ளனர். இருவரும் அகமத்கரில் உள்ள பொது சேவை மையத்தில் பணியாற்றி வந்தனர். கைதான இருவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post சச்சின் மீனா – சீமா ஹைதர் காதல் விவகாரம்; போலி ஆவணங்களை தயாரித்த 2 சகோதரர்கள் கைது: பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sachin Meena ,Haider ,Lucknow ,Seema Haidar ,Seema Haider ,Force Action ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலத்தில் துணிக்கடையில் தீ...