×

சூடான் விமான விபத்தில் 9 பேர் பரிதாப பலி

கார்டூம்: சூடானில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் போர்ட் சூடான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிவிலியன் விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிறுமி உள்ளிட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்டோனோவ் விமானத்தில் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக சூடான் ராணுவம் தெரிவித்துள்ளது.

The post சூடான் விமான விபத்தில் 9 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Sudan ,Khartoum ,
× RELATED சென்னையில் இருந்து சூடான் நாட்டிற்கு...