டெல்லி: ஞானவாபி மசூதியில் எங்கும் அகழாய்வை தொல்லியல் நிபுணர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஞானவாபியில் தொல்லியல் ஆய்வுக்கு வாரணாசி கோர்ட் அனுமதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மசூதி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஞானவாபியில் அகழாய்வு நடத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். மனுதாரர்கள் விருப்பப்பட்டால் அகமதாபாத் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள ஜூலை 26 மாலை 5 மணி வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
The post ஞானவாபி மசூதியில் எங்கும் அகழாய்வை தொல்லியல் நிபுணர்கள் மேற்கொள்ள மாட்டார்கள்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.