வாரணாசி: இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்தனர். தொல்லியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழு ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி, கோயில் மீது கட்டப்பட்டுள்ளதா என்பதை அறிவியல் முறையில் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதிக்க கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
The post இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு..! appeared first on Dinakaran.