×

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 150 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 3,343 சிசிடிவிக்களில் சுமார் 150 கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் போக்குரவத்து விரைவான மற்றும் நம்பகமாக போக்குவரத்தாக இருந்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்து விரைவாக செல்ல அதிக அளவு மக்களால் மெட்ரோ ரயில் போக்குரவத்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 3,343 சிசிடிவிக்களில் சுமார் 150 கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து பழுதாகியுள்ள கேமராக்கள் நீக்கப்பட்டு விரைவில் புதிய கேமராக்கள் பொருத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. மேலும் வாகன நிறுத்துமிடம் பகுதிகளில் கூடுதலாக சிசிடிவிக்களை பொருத்தவும் மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 150 சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...