×

டி.கல்லுப்பட்டியில் துணிகரம் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் திருட்டு

பேரையூர், ஜூலை 24: டி.கல்லுப்பட்டியில் வசிக்கும் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச்ெசன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி எம்.ஆர்.நகரில் வசித்து வருபவர் சோமு முருகன். இவரது மனைவி முத்துவேல் செல்வி (40) இவர் நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சோமுமுருகன் திருமங்கலம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

வேலை முடிந்து நேற்று காலை அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த தாலிச்சங்கிலி, கம்மல்கள், கொலுசுகள் மற்றும் ரூ10 ஆயிரத்து 500 ரொக்கம் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சோமுமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பெண் போலீஸ் ஏட்டு வீட்டிலேயே நடந்த திருட்டு சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டி.கல்லுப்பட்டியில் துணிகரம் பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : TD ,Kallupatti ,BERAYUR ,Kallupati ,D. ,Venture ,bullupatti ,
× RELATED கம்ப்யூட்டர், லேப்டாப் திருட்டு