×

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

 

தேவகோட்டை, ஜூலை 24: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள நடராஜபுரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (50) கொத்தனார். இவரது மனைவி கடந்த 40 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால், மனவேதனையுடன் இருந்த நாகராஜ் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து தகவலறிந்ததும் தேவகோட்டை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Nagaraj ,Kothanar ,Natarajapuram ,Sivagangai district ,Devakottai.… ,
× RELATED நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கோரிக்கை