×

திருக்கோஷ்டியூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் களைகட்டியது

 

திருப்புத்தூர், ஜூலை 24: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் மயில்ராயன்கோட்டை நாடு குண்டேந்தல்பட்டி, திருககோஷ்டியூர் தேவர் பேரைவை மற்றும் அனைத்து சமுதாயத்தினரின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரியமாட்டுப் பிரிவில் 7 ஜோடிகள் பங்கேற்றன. இதில் அவனியாபுரம் மோகன் மாடு முதல் பரிசினையும், புதுப்பட்டி அம்பாள் மாடு 2ம் பரிசையும், சத்திரப்பட்டி ஜெயபாலகிருஷ்ணன் மாடு 3ம் இடத்தையும், என்.டி.பட்டி நல்லுத்தேவர் மாடு 4ம் இடத்தையும், நெம்மலிககாடு ஓம்முடைய அய்யனார் மாடு 5ம் இடத்தையும், வென்றது.

சின்னமாடு பிரிவில் 21 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில் பூக்கொல்லை ரித்தீஸ்வரன் மாடு முதலிடத்தையும், குப்பதேவன் சங்குமாமணி 2-ம் இடத்தையும், ஏரியூர் பெத்தாச்சி மாடு 3ம் இடத்தையும், அதிகரை வேங்கைசேர்வை மாடு 4ம் இடத்தையும், நகரம்பட்டிவைத்தியா மாடு 5ம் இடத்தையும் வென்றது. வெற்றி மாடுகளுக்கு வேஷ்டி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டு ரொக்கப்பரிசுகளை திருப்புத்தூர் திமுக ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல் வழங்கினார். பந்தய ஏற்பாடுகளை திமுக ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், பிராமணம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் நவநீதகிருஷ்ணன், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post திருக்கோஷ்டியூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் களைகட்டியது appeared first on Dinakaran.

Tags : Double bullock cart race ,Thirkoshtiyur ,Tiruputhur ,Mailrayankottai Nadu Kundentalpatti ,Thirukakoshtiur ,Devar Pareivai ,Tirukoshtiur ,Sivagangai District Tiruputhur ,Double Bullock Cart Race in Tirukoshtiur ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது