×

வேலாயுதம்பாளையம் பகுதியில் முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம்: கரூர் ஒன்றியம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியர் சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post வேலாயுதம்பாளையம் பகுதியில் முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Sashti ,Murugan ,Velayuthampalayam ,Balasubramanya ,Swami ,Pugazhimalai ,Balasubramanya Swamy ,Temple ,Karur Union ,Shashti ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்