×

மின் பகிர்மான வட்ட செயற்குழு கூட்டம்

 

ஸ்ரீபெரும்புதூர்: தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் பெடரேஷன் சார்பில் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட செயற்குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள ஒரகடம் பகுதியில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு செங்கல்பட்டு செயலாளர் கருணாகரன் தலைமை வகித்தார். தலைவர் நாகபிள்ளை, பொருளாளர் சீனிவாசன், அமைப்பு செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல அமைப்பு செயலாளர் தயாநிதி கலந்து கொண்டார்.

பின்னர் பேசுகையில், இந்த கூட்டத்தில் கேங் மேன்களுக்கு இடமாற்றம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 2019 முதல் 2023 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன. இதில், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post மின் பகிர்மான வட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Circle ,Committee ,Sriperumbudur ,Tamil Nadu Electricity Board Employees Federation ,Chengalpattu ,Power Distribution Circle ,Dinakaran ,
× RELATED காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்