×

பங்கு வர்த்தகத்தில் ரூ.47 லட்சம் இழப்பு நிதிஆலோசகர் தற்கொலை

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பாபுராஜ் (42). பங்கு சந்தை முதலீட்டு ஆலோசகர். தஞ்சாவூரில் அலுவலகம் அமைத்து பலரிடமும் முதலீடு பெற்று சில நிறுவனத்தின் பங்குகளை வாங்கி பங்கு வர்த்தகம் செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் பாபுராஜ், பலருக்கும் லாபம் ஈட்டிக்கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்தவாரம், பாபுராஜ் பங்கு முதலீடு செய்திருந்த நிறுவனங்களின் ஷேர் விலை திடீரென சரிந்தது.

இதனால் அவரிடம் முதலீடு செய்வதற்காக பணம் கொடுத்த இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் ஒருவரும், சென்னையில் உள்ள வங்கியில் பணியாற்றி வரும் அலுவலரும் நேற்றுமுன்தினம் தஞ்சாவூர் வந்து தங்களுக்கு இழப்பு ஏற்பட்ட ரூ.47 லட்சத்தை தரும்படி மிரட்டி, பத்திரத்தில் கையெழுத்து பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post பங்கு வர்த்தகத்தில் ரூ.47 லட்சம் இழப்பு நிதிஆலோசகர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Baburaj ,Mannargudi ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...