×

பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீ மாணவி கிரிவலம்

திருவண்ணாமலை: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பரதநாட்டிய கலைஞரான மாணவி பவ்ய ஹாசினி(17), பரதநாட்டியம் ஆடியபடி திருவண்ணாமலையில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று நேற்று வினோதமுறையில் வழிபட்டார். அவருக்கு முன்னால் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனத்தில் பரதநாட்டியத்திற்கு தகுந்த இசை பாடல்கள் ஒலித்தபடி சென்றனர். அந்த பாடல்களுக்கு ஏற்ப மாணவி பவ்ய ஹாசினி பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றார். அதிகாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி காலை 9 மணிக்கு ராஜகோபுரம் முன்பு கிரிவலத்தை நிறைவு செய்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், அண்ணாமலையாரின் தீவிர பக்தரான பவ்ய ஹாசினி, உலக நன்மை வேண்டி பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்றதாக தெரிவித்தனர்.

The post பரதநாட்டியம் ஆடியபடி 14 கி.மீ மாணவி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Krivalam ,Thiruvannamalai ,Bhavya Hasini ,Nellore, Andhra Pradesh ,Tiruvannamalai ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலையும்...