×

சாலை விபத்தில் பிட்டர் பலி

திண்டுக்கல், ஜூலை 23: திண்டுக்கல் பழைய கரூர் ரோடு என்.எஸ்.நகரை சேர்ந்தவர் நாகராஜ்(52). இவர் பிட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஓடைப்பட்டியில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஓடைப்பட்டியில் இருந்து என்.எஸ். நகருக்கு இருசக்கர வாகனத்தில் நாகராஜ் சென்றார்.

ஓடைப்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ரோட்டில் விழுந்து பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

The post சாலை விபத்தில் பிட்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Bitter ,Dindigul ,Nagaraj ,NS Nagar, ,Old Karur Road ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...