×

கூலித்தொழிலாளி மர்ம சாவு

திருவிடைமருதூர், ஜூலை 23: திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே முள்ளுக்குடியில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். முள்ளுக்குடியை சேர்ந்த லட்சுமணன் மகன் அய்யப்பன் (45), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காந்தி மகன் துர்க்கைராஜன் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்கச்சென்ற அய்யப்பன் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன், இறந்து கிடந்தார். அவரது உடலில் விஷம் அருந்தியதற்கான அடையாளம் தென்பட்டது. இது தொடர்பாக அய்யப்பன் மகன் சபரிநாதன், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என வழக்குபதிந்து துர்க்கைராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூலித்தொழிலாளி மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruvidaimarudur ,Mullukudi ,Tiruppanandal ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை