×

பூந்தமல்லி அருகே மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உறுப்புகள் தானம்

பூந்தமல்லி, ஜூலை 23: பூந்தமல்லியை அடுத்த நகரத்பேட்டை, அகரமேல் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் சந்தோஷ்(23). இவர் லேத் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர் ரஞ்சித்(25). இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்றனர். பைக்கை ரஞ்சித் ஓட்டிச் சென்றுள்ளார். பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே வந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த பைக்கின்மீது, இவர்கள் பைக் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். சந்தோஷுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. ரஞ்சித்தும் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சந்ேதாஷுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூளைச் சாவு ஏற்பட்டு, அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், தங்கள் மகன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து, சந்தோஷின் கண், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. படுகாயம் அடைந்த ரஞ்சித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பூந்தமல்லி அருகே மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Yehumalai ,Akaramel, Nagarapet ,Santosh ,Lathe ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...