×

கோவை விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த ராஜஸ்தான் விவசாயி கைது

கோவை: கோவை விமான நிலையத்திற்கு குண்டுகளுடன் வந்த விவசாயி கைது செய்யப்பட்டார். கோவை பீளமேடு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஷியாம் சிங் (42) என்பவர் வைத்திருந்த பேக்கில், 2 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் அந்த குண்டுகளை பற்றி விசாரித்தபோது ஷியாம் சிங், ஜெய்ப்பூரில் விவசாயம் செய்து வருகிறேன். திருப்பூரில் பனியன் நிறுவத்தில் வேலை செய்யும் தம்பி பவானி சிங்கை பார்க்க வந்து ஒரு மாதமாக தங்கியிருந்தேன். நான் துப்பாக்கி பயன்படுத்துவதில்லை. இந்த குண்டு எப்படி வந்தது என தெரியாது எனக்கூறினார். போலீசார் பவானி சிங்கையும் அழைத்து விசாரித்தனர்.பின்னர் ஷியாம் சிங் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவரின் பின்னணி தொடர்பாக ஜெய்ப்பூர் போலீசாரிடமும் போலீசார் தகவல் கேட்டுள்ளனர்.

The post கோவை விமான நிலையத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த ராஜஸ்தான் விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Coimbatore airport ,Coimbatore ,Coimbatore Beelamedu Airport ,Dinakaran ,
× RELATED கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்..!!