×

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தாக்கப்பட்ட விவகாரம் பாஜ செயலாளர் சூர்யா மீதான வழக்கில் இறுதி அறிக்கைக்கு தடை: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையிலிருந்து வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரை தாக்கி பூணூலை அறுத்ததாக ஒரு இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜூன் 28ம் தேதி அளித்த புகாரில் செய்தி நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பாஜ மாநில செயலாளருமான எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், இந்த வழக்கு தொடர்பாக 6 வாரங்களில் சிதம்பரம் போலீசார் பதிலளிக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டார்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தாக்கப்பட்ட விவகாரம் பாஜ செயலாளர் சூர்யா மீதான வழக்கில் இறுதி அறிக்கைக்கு தடை: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja ,Temple ,Dikshitar ,BJP ,Suriya ,Chennai ,Kanakasabha ,Chidambaram ,Nataraja ,Hindu Religious Charities Department ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...