×

சூதாடிய மூன்று பேர் கைது

 

சாத்தூர், ஜூலை 22: சாத்தூர் அருகே சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேசன் மேலகாந்திநகர் பகுதியில் ரோந்து சென்றுள்ளார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் இருந்த மரத்தடியில் இருந்து சத்தம் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு மேலகாந்திநகரை சேர்ந்த ராஜா(41), கண்ணன்(51), ஆண்டாள்புரத்தை சேர்ந்த முருகேசன்(44) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1400 மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தார்.

The post சூதாடிய மூன்று பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chatur ,Chatur Nagar Police… ,
× RELATED தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்