×

குளிக்க சென்றபோது தவறி விழுந்த பஸ் டிரைவர் பலி

 

கரூர், ஜூலை 22: வெள்ளியணை அருகே குளிக்க சென்ற டிரைவர் தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்துள்ள தெற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விமலக்கண்ணன் (42). தனியார் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 19ம்தேதி அன்று மதியம், வீட்டின் அருகில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயமடைந்தார். ஆபத்தான நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post குளிக்க சென்றபோது தவறி விழுந்த பஸ் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Karur ,Vellianani ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு