×

மணிப்பூர் மக்கள் பெண்களை தாயாக மதிப்பார்கள்: முதல்வர் பிரேன்சிங் சொல்கிறார்

மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் தெரிவித்தனார். கூறியதாவது : மணிப்பூர் மாநில மக்கள் பெண்களை தங்கள் தாயாக கருதுகிறார்கள், ஆனால் இரண்டு பழங்குடியின பெண்களைத் தாக்கி நிர்வாணமாக்கிய குற்றத்தால் மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. கலவரத்தில் சில குண்டர்கள் இதை செய்து எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியுள்ளோம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர். மரண தண்டனைக்கான சாத்தியத்தை கருத்தில் கொள்வது உட்பட அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை எனது அரசு உறுதி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மணிப்பூர் மக்கள் பெண்களை தாயாக மதிப்பார்கள்: முதல்வர் பிரேன்சிங் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Chief Minister ,Fransingh ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது