×

மதுரவாயலில் பரபரப்பு பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ: 3 கார்கள் சேதம்

பூந்தமல்லி: தனியார் பிளைவுட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை மதுரவாயல் அருகே வானகரம், பிள்ளையார் கோயில் தெருவில் தனியார் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது. இந்ததொழிற்சாலை வளாகத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. தீ கொழுந்துவிட்டு எரிந்து நான்குபக்கமும் பரவத் துவங்கியது. பின்னர், காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி, அதே வளாகத்தில் இயங்கி வரும் கார் பழுதுபார்க்கும் ஷெட் மற்றும் மின் டிரான்ஸ்பார்மர் கம்பெனிகளுக்கும் தீ பரவியது. இதனால் அங்கு பணியில் இருந்தவர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்த மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், அம்பத்தூர் உள்பட 10 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி பிளைவுட் கம்பெனியில் பரவிய தீயை முற்றிலும் அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதில், பிளைவுட் கம்பெனியில் தயாரான புதிய மரப்பலகைகள், கார் ஷெட்டில் பழுதுபார்ப்பு பணிக்கு நின்றிருந்த 3 கார்கள் மற்றும் புதிய டிரான்ஸ்பார்மர் கருவிகள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டன. இதுகுறித்து, மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிளைவுட் கம்பெனியில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் நாசவேலை காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post மதுரவாயலில் பரபரப்பு பிளைவுட் தொழிற்சாலையில் திடீர் தீ: 3 கார்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Stir ,Plywood factory ,Maduravalam ,Poonthamalli ,Bancaram ,Maduravayal, Chennai ,Pillayar Temple Street ,Stirring Plywood Factory ,Dinakaran ,
× RELATED சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு