சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொது சிவில் சட்டம் குறித்தான கேள்விகளை எழுப்பினார்.பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களின் கருத்துக்கு எதிராக இருக்கும்போது, சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வதற்கான காரணம் என்ன? மேலும், அனைத்து அரசியல் கட்சிகளிடையே பரந்த ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என்று சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? என கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியாவின் 21வது சட்ட ஆணையம் கடந்த 2018ம் ஆண்டு ஆக.31ம் தேதியன்று “குடும்பச் சட்டத்தின் சீர்திருத்தம்” குறித்த ஆலோசனை கட்டுரையை வெளியிட்டது. ஆனால் அது எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. மேற்கூறிய வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், அதன் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, 22வது சட்ட ஆணையம், இந்தாண்டு ஜூன் 14ம் தேதி மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் பெற முடிவு செய்தது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
The post பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என சிறுபான்மை சமூகங்களுக்கு ஒன்றிய அரசு உறுதியளிக்குமா? மாநிலங்களவையில் வைகோ கேள்வி appeared first on Dinakaran.