×

நேர்காணல் பேட்டி எடுப்பதாக கூறி ஓட்டலில் போஜ்புரி நடிகை பலாத்காரம்: இன்ஸ்டாகிராம் நண்பர் தலைமறைவு

குர்கிராம்: அரியானாவில் நேர்காணல் பேட்டி எடுப்பதாக கூறி ஓட்டலில் வைத்து போஜ்புரி நடிகை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்டாகிராம் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். அரியானா மாநிலம் குர்கிராம் பகுதியை சேர்ந்த 24 வயதான போஜ்புரி நடிகை, தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வரும் நிலையில், அவரிடம் பேட்டி எடுக்க இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவர் விருப்பம் தெரிவித்தார். அதற்காக குர்கிராமில் செயல்படும் ஓட்டலுக்கு அவரை நண்பர் வரச்சொன்னார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஓட்டலுக்கு நடிகை வந்தார். அப்போது அவரை வரவேற்ற நண்பர், ஓட்டலின் அறைக்கு அழைத்து சென்று பேட்டி எடுப்பவது பேச்சு கொடுத்தார்.

பின்னர் நடிகையை துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அதிர்ச்சியடைந்த நடிகை, நண்பரின் பிடியில் இருந்து தப்பி வெளியே வந்தார். நடந்த சம்பவத்தை போலீசாரிடம் புகாராக அளித்தார். இதுகுறித்து போலீஸ் உதவி ஆணையர் (குற்றம்) வருண் தஹியா கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட போஸ்புரி நடிகை, தனது இன்ஸ்டாகிராம் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நேர்காணல் பேட்டி எடுப்பதாக கூறி, அவரை அழைத்து வந்த நண்பரே அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட நண்பரின் பெயர் மகேஷ் பாண்டே என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக அவர் மீதும், அவரது நண்பர்கள் மீதும் கொலை மிரட்டல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது’ என்றார்.

The post நேர்காணல் பேட்டி எடுப்பதாக கூறி ஓட்டலில் போஜ்புரி நடிகை பலாத்காரம்: இன்ஸ்டாகிராம் நண்பர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Instagram ,Gurgaon ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்